மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் விட்டு விட்டு லேசான சாரல் மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் விட்டு விட்டு லேசான சாரல் மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் விட்டு விட்டு லேசான சாரல் மழை

சாரல் மழையால் விவசாயியக்ள் மகிழ்ச்சி அடைந்தனர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் மழை பொழிய வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை, மயிலாடுதுறை மாவட்டம் கடற்கரையோரம் கிராமங்களான பழையார் ,திருமுல்லைவாசல் பூம்புகார், தரங்கம்பாடி பகுதியில், லேசான மழை விட்டு விட்டு பெய்தது. மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 நிமிடம் சாரல் மழை விட்டு விட்டு பெய்து ஓய்ந்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டமாக இருப்பதால் இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நிலத்தடிநீரைக் கொண்டு, சம்பா தாளடி விவசாயம் மேற்கொண்டு வரும், விவசாயிகள் நல்ல மழையை எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story