கரூரில் வங்கி ஊழியர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது

தொழிற்சங்கம் பலமாக இருந்தால் தான் ஊழியர்களின் உரிமையை நிறைவேற்ற முடியும் என பொது செயலாளர் கிருபாகரன் கரூரில் விளக்கம் அளித்தார்.

தொழிற்சங்கம் பலமாக இருந்தால் தான் ஊழியர்களின் உரிமையை நிறைவேற்ற முடியும்.பொது செயலாளர் கிருபாகரன் கரூரில் விளக்கம். கரூர் -கோவை சாலையில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் உள்ள கூட்டரங்கில், பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்க (சென்னை வட்டம்) மற்றும் கோவை மண்டல 27 வது, உறுப்பினர் சந்திப்பு கூட்டம் சங்கத்தின் மாநில தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் துவக்கத்தில் கூட்ட அரங்கில் குத்துவிளக்கை ஏற்றி வைத்து, கூட்டத்தை துவக்கினர். கூட்டத்திற்கு வருகை தந்த முக்கிய சங்க நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினர்.

இந்த கூட்டத்திற்கு மாநில பொது செயலாளர் கிருபாகரன், கோவை மண்டல துணை பொது செயலாளர் செந்தில்குமார், கரூர் மாவட்ட உதவி பொதுச் செயலாளர் நம்பிராஜன், துணைத் தலைவர்கள் காஜா பக்ருதீன், இமானுவேல் இளவேந்தன் உள்ளிட்ட வங்கி ஊழியர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய சங்கத்தின் பொது செயலாளர் கிருபாகரன், சங்க ஊழியர்கள் பணி நேரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், முடிந்தவரை தவறுகள் இல்லாமல் பணி மேற்கொள்ள வேண்டும் எனவும், சங்கத்தின் மூலம் போராடி பெற்ற உரிமைகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறிய அவர், நமது தொழிற்சங்கம் பலமாக இருந்தால் தான், ஊழியர்களின் உரிமைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியும் என விளக்கம் அளித்தார்.

Tags

Next Story