போக்குவரத்து கழக கோட்ட மேலாளரை கண்டித்து சிஐடியுவினர் கூட்டம்

கரூரில் தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் கும்பகோணம் போக்குவரத்து கழக கொட்ட மேலாளரை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் வாயில் கூட்டம் நடத்தினர்.
கரூர் அடுத்த திருமீநிலையூர் பகுதியில் செயல்படும் தமிழக அரசின் கும்பகோணம் பேருந்து கோட்டம் அலுவலகம் முன்பு, சி ஐ டி யு சார்பில், கோட்ட மேலாளர் மகேந்திர குமாரின், தொழிலாளர்களுக்கு எதிரான அடாவடி செயல்களை கண்டித்து, வாயில் கூட்டம் கரூர் கிளை செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இந்த வாயில் கூட்டத்தில், திருச்சி - கரூர் மண்டல தலைவர் சீனிவாசன், செயலாளர் மாணிக்கம், சிஐடியு மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் முருகேசன், மற்றும் சிவானந்தம், TNSTC ஈரோடு மண்டல துணைத் தலைவர் சரவணன்,சி ஐ டி யு மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட உதவி செயலாளர் ராஜா முகமது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர்களுக்கு எதிராக மேலாளர் கையாளும் பல்வேறு விஷயங்கள் குறித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story