வாழைக்குலை கிடைக்காதால் காய்களை பறித்து சென்ற மகளிர்

வாழைக்குலை கிடைக்காதால் காய்களை பறித்து சென்ற மகளிர்

காய்களை பறித்து சென்ற மகளிர்

தமிழ்நாடு முதலமைச்சர் வருகைக்காக புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் பகுதியில் அலங்காரத்திற்காக வாழை மரங்கள் வைக்கப்பட்டதை பெண்கள் பறித்தும் பிய்த்தும் எடுத்து சென்றனர்
மயிலாடுதுறையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது . தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்து உரையாற்றினார், கட்டிடம் திறப்பதற்கு முன்பாக கூட்டம் நடக்கும் மேடைவரை நூற்றுக்கணக்கான வாழைமரங்கள் குலையுடன் கட்டப்பட்டிருந்தது தமிழ்நாடு முதல்வர் நிகழ்ச்சி முடித்துவிட்டு சென்ற சில நேரத்தில் கட்டப்பட்டிருந்த வாழை மரத்தில் இருந்த தார்கள், வாழைக்குலைகளை எடுத்தும் இழுத்து பார்த்து வராதால் கையில் கிடைத்த வரை காய்களை பறித்து சென்றனர். ஒரு சிலர் வாழைத்தாரை தூக்கி சென்ற சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியது.

Tags

Next Story