ரூ.6 லட்சத்தில் பூம்புகார் பகுதியில் புதிய நிழல் குடை

ரூ.6 லட்சத்தில் பூம்புகார் பகுதியில் புதிய நிழல் குடை

ரூ.6 லட்சத்தில் பூம்புகார் பகுதியில் புதிய நிழல் குடைரூ

மேலையூர் ஊராட்சியில் ரூ.6 லட்சத்தில் புதிய பயணிகள் நிழற்குடை எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலையூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் வெண்ணிலா தென்னரசன், ஒன்றிய கவுன்சிலர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் நளினி ராதாகிருஷ்ணன் வரவேற்றார். இதில்கருணாநிதி, கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராசாத்தி சேதுராமன் நன்றி கூறினார் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் கலந்து கொண்டு புதிய பஸ் பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார். விழாவில் கூட்டுறவு சங்க தலைவர் ஞானவேலன், திமுக ஒன்றிய செயலாளர்கள் அமுர்தவிஜயகுமார், அப்துல் மாலிக், முன்னாள் எம்எல்ஏ சித்திக், கிளை கழக செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர் .

Tags

Next Story