வயிற்று வலியால் அவதிப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை !

வயிற்று வலியால் அவதிப்பட்டவர்  தூக்கிட்டு தற்கொலை !

தற்கொலை

வயிற்று வலியால் அவதிப்பட்டவர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை. காவல்துறை வழக்கு பதிவு.

வயிற்று வலியால் அவதிப்பட்டவர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட, சணப்பிரெட்டி, குடித்தெருவை சேர்ந்தவர் சண்முகம் வயது 53. இவர் பகுதியில் கூலி வேலை செய்து வந்தார்.

இவருக்கு கடந்த சில வருடங்களாகவே வயிற்று வலி ஏற்பட்டு, அதற்காக தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தும், அவருக்கு வயிற்று வலி சரியாகவில்லை. இதனால், விரக்தி மனப்பான்மையிலேயே வாழ்ந்து வந்த சண்முகம், ஏப்ரல் 25ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மறுநாள் காலை 7 மணி அளவில், சண்முகத்தின் மனைவி கலைச்செல்வி தனது கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த சண்முகத்தின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story