டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம்!

டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம்!

வழக்கு பதிவு

டூவீலர் மீது லாரி மோதி விபத்து. வாலிபர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.

டூவீலர் மீது லாரி மோதி விபத்து. வாலிபர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, வேலுச்சாமிபுரம், சக்தி நகர், 1வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சுப்பிரமணி வயது 32. இவர் ஏப்ரல் 13-ஆம் தேதி இரவு 11:30 மணி அளவில், கரூர் - மதுரை சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

இவரது வாகனம் அப்பகுதியில் உள்ள ஹெச்பி பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் பெர்மையன் வயது 45 என்பவர் ஓட்டி வந்த அசோக் லேலண்ட் லாரி, பாலசுப்பிரமணியம் ஓட்டி சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

இதனால், நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்த பாலசுப்பிரமணிக்கு இடது கையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாலசுப்பிரமணி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், லாரியை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பெர்மையன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story