டூவீலர் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு !

டூவீலர் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு !

வழக்கு பதிவு

நடந்து சென்ற முதியவர் மீது இளைஞர் ஓட்டிய டூவீலர் மோதி உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.
நடந்து சென்ற முதியவர் மீது இளைஞர் ஓட்டிய டூவீலர் மோதி உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, நீலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி வயது 67. இவர் மார்ச் 25ஆம் தேதி இரவு 10:45 மணி அளவில், ரத்தினம் சாலையிலிருந்து ரயில்வே ஜங்ஷன் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள குமரன் மில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில், கரூரை அடுத்த வெங்கமேடு, பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் செல்வமுத்து வயது 24 என்பவர், வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், நடந்து சென்ற தண்டபாணி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த தண்டபாணிக்கு தலை மற்றும் கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தண்டபாணி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தண்டபாணியின் மனைவி மணிமாலா வயது 56 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்பட காரணமான செல்வமுத்து மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story