சாலையில் நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து !

சாலையில் நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து !

வழக்கு பதிவு 

சாலையைக் கடந்து நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

சாலையைக் கடந்து நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், வெங்கமேடு, குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் வயது 55.

இவர் ஏப்ரல் 26 ஆம் தேதி இரவு 8 மணி அளவில், சேலம் - கரூர் சாலையில் உள்ள, வெண்ணமலை வேல்முருகன் ஆட்டோ கேரேஜ் அருகே நடந்து சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது,அதே சாலையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, கணக்கு வேலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜ மணாளன் என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், நடந்து சென்ற அருணாச்சலம் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், அருணாச்சலத்திற்கு இடது கால் தொடை, வலது கால் மற்றும் இடுப்பு ஆகியபகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அருணாச்சலம் அளித்த புகாரின் பேரில்,சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய ராஜமணாளன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story