தந்தோணிமலை அருகே நடந்து சென்ற பெண் மீது பைக் மோதி விபத்து

தந்தோணிமலை அருகே  நடந்து சென்ற பெண் மீது பைக் மோதி விபத்து

காவல் நிலையம் 

தந்தோணிமலை அருகே நடந்து சென்ற பெண் மீது பைக் மோதி விபத்துக்குள்ளனது.

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, வாங்களம்மன் ஸ்டோர் அருகே அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி விஜயா வயது 47. இவர் ஏப்ரல் ஐந்தாம் தேதி இரவு 7:30 மணி அளவில், திண்டுக்கல் - கரூர் சாலையில் வாங்களம்மன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும்போது,

அதே சாலையில் திண்டுக்கல் மாவட்டம், அணைப்பட்டி, டி .செட்டியூர் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் மகன் சங்கிலி முருகன் வயது 28 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் நடந்து சென்ற விஜயா மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விஜயாவுக்கு தலை, வலது காது உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால்,

உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கோவையில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த விஜயாவின் கணவர் செல்வராஜ் வயது 59 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பெயரில், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,

டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஒட்டி விபத்து ஏற்படுத்திய சங்கிலி முருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.

Tags

Next Story