உடல்நல குறைவால் அவதிப்பட்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை !

உடல்நல குறைவால் அவதிப்பட்ட இளம்பெண்  தூக்கிட்டு தற்கொலை !

வழக்கு பதிவு 

சுந்தரம் நகரில் வயிற்றுவலி, காது வலியால் அவதிப்பட்ட இளம்பெண் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சுந்தரம் நகரில் வயிற்றுவலி, காது வலியால் அவதிப்பட்ட இளம்பெண் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம், ஆத்தூர் பிரிவு, ஆண்டாங்கோவில், சுந்தரம் நகர் பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ் மனைவி கனிமதி வயது 31. கனிமதி கடந்த மூன்று வருடங்களாக வயிற்று வலி மற்றும் காது வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டும், அவருக்கு குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த மனநிலையில் வாழ்ந்து வந்த கனிமதி, ஜூன் 6-ம் தேதி மாலை 4:30 மணி அளவில், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்று இருந்த பாக்கியராஜ் வீடு திரும்பிய போது, தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும்,இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பெயரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த கனிமதியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story