தலைமறைவு குற்றவாளி கேரளாவில் கைது

தலைமறைவு குற்றவாளி கேரளாவில் கைது

தலைமறைவு குற்றவாளி கேரளாவில் கைது


குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் துறை தலைவர் ஜோசி நிர்மல் குமார் பொறுப்பேற்ற பின் தமிழக முழுவதிலும் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை சிறப்பு ரோந்து படை உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ் தலைமையிலான போலீசாருக்கு குடிமை பொருள் வழக்கு குற்றவாளி கேரளாவில் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் கேரளா விரைந்த தனிப்படையினர் பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை குற்ற எண் 171/ 2023 என்ற வழக்கில் தொடர்புடைய கேரள மாநிலம் பாலகாட்டை சேர்ந்த காஜா ஹூசைன் என்ற நபரை தனியார் விடுதியில் தங்கி இருந்தவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story