பொள்ளாச்சி கோவை சாலையில் விபத்து - கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலி

பொள்ளாச்சி கோவை நான்கு வழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலி - கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் விசாரணை..
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஜெய்ஷித்தல் முண்டே வயது 21, மற்றும் ரிஷி கேஸ்ரமேஸ்வர் குட்டே 20 ஆகியோர் பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு கொண்டம்பட்டி பகுதியில் தனியார் சித்த மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகின்றனர்.. இந்நிலையில் இரண்டு பேரும் டீ குடிப்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டு மீண்டும் திரும்பி அவர்கள் தங்கி இருக்கும் அறைக்கு சென்று கொண்டிருக்கும் போது கோவை - பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் உள்ள அரசம்பாளையம் பிரிவு அருகில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தில் முன்பகுதியில் வேகமாக மோதியதில் இரண்டு கல்லூரி மாணவர்களும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.. இது குறித்து தகவல் அறிந்தது வந்த கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனம் மீது மோதிய வாகனத்தை நான்கு வழி சாலை அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர். இரண்டு கல்லூரி மாணவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story