தமிழகத்திற்கு சூட்டிங் வரும் நடிகர் மோடி - காங்கிரசார் கிண்டல்

பிரதமர் மோடி சூப்பர் நடிகர், அவ்வப்போது தமிழகம் வந்து சூட்டிங் நடத்திவிட்டு செல்கிறார். ஆனால் ராகுல் காந்தி மக்களோடு மக்களாக இருக்கின்ற தலைவர் மகாத்மா காந்திக்கு பிறகு உலகத் தலைவராக விளங்கி வருகிறார் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

பாராளுமன்றத் தேர்தல் வரும் 19.ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் கோவையில் வரும் மார்ச் 12.ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்..

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோவைக்கு ராகுல் காந்தி வருகை அக்கட்சி நிர்வாகிகள் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்துள்ளது.. நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து பொள்ளாச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோவையில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்திற்கு சுமார் 600 வாகனங்கள் மூலம் தொண்டர்கள் செல்ல உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை உலகத்திலேயே வெகுஜன மக்களுக்காக அளிக்கப்பட்ட தேர்தல அறிக்கை இந்த தேர்தல் அறிக்கையை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் தெருமுனைப் பிரச்சாரங்கள், திண்ணை பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். பிரதமர் மோடி சூப்பர் நடிகர் அவ்வப்போது தமிழகம் வந்து சூட்டிங் நடத்திவிட்டு செல்கிறார் ஆனால் ராகுல் காந்தி மக்களோடு மக்களாக இருக்கின்ற தலைவர் மகாத்மா காந்திக்கு பிறகு உலகத் தலைவராக உன்னத தலைவராக விளங்கி வருகிறார் என காங்கிரஸ் கட்சியினர் பெருமிதம் தெரிவித்தனர்.

Tags

Next Story