தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை

தொழிற்பயிற்சி மையம்

கரூர் வேலைவாய்ப்பு & பயிற்சித்துறை தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கரூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் (https://skilltraining.tn.gov.in/DET/) என்ற இணையதளம் மூலமாக இணைய வழியே சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 07.06.2024. 10.05.2024 முதல் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் வந்தும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கீழ்க்கண்ட தொழிற்பிரிவுகள் 1. Sewing Technology (தையல் தொழிற்நுட்ப பயிற்சி ) 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம் -1 ஆண்டு (மகளிர் மட்டும்). 2.Desktop Publishing Operator (கணினி தொழிற்நுட்ப பயிற்சி ) 10-ம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம்-1 ஆண்டு (மகளிர் மட்டும்). 3.Mechanic Auto Body Repair - 10-ம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம்-1 ஆண்டு (ஆண்/பெண் இருபாலரும் ) 4.Operator Advanced Machine Tools - 10-ம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம் -2 ஆண்டு (ஆண்/பெண் இருபாலரும் ). அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை, இலவச பேருந்து கட்டண சலுகை, மிதிவண்டி, வரைபடக் கருவிகள்,பாடப் புத்தகங்கள்,சீருடைகள்,காலணிகள் அரசால் வழங்கப்படும்.

மேலும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் சேர்க்கை தொடர்பான கூடுதல் விபரங்களை கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல் வரை தொலைபேசி (04324-222111, 9499055711) வாயிலாக அல்லது நேரில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story