மாற்றுத்திறனாளிகள் தினம் பேரணி நடத்துவது தொடர்பாக ஆலோசனை

மாற்றுத்திறனாளிகள் தினம் பேரணி நடத்துவது தொடர்பாக ஆலோசனை

ஆலோசனை கூட்டம்

டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினம் பேரணி நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆனந்தம் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பாக டிசம்பர் மூன்றாம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று நடக்க இருக்கும் மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகன பேரணி மற்றும் அன்று மதியம் நடைபெறும் மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பவர் டெக்ஸ் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் பாபு, மாவட்ட செயலாளர் செல்லப்பா, சங்க ஆலோசகர் புதுக்கோட்டை மருத்துவர் பழனிச்சாமி, சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சுப்ரமணியம், மாநில பொருளாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் நன்றி கூறினார். டிசம்பர் மூன்றாம் தேதி அன்று கரூரில் உலக மாற்று திறனாளிகள் தினத்தில் பேரணி நடத்துவது மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகளை அழைப்பது எனவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Tags

Next Story