அதிமுக வேட்பாளர் கோயில் யானையிடம் ஆசி பெற்றார்

அதிமுக வேட்பாளர் கோயில் யானையிடம் ஆசி பெற்றார்

மயிலாடுதுறையில் ஸ்ரீ மயூரநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்து கோயில் யானையிடம் ஆசி பெற்று நகர் முழுவதும் அதிமுக வேட்பாளர் பாபு தீ வாக்கு சேகரித்தார்.


மயிலாடுதுறையில் ஸ்ரீ மயூரநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்து கோயில் யானையிடம் ஆசி பெற்று நகர் முழுவதும் அதிமுக வேட்பாளர் பாபு தீ வாக்கு சேகரித்தார்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ப.பாபு வீதி வீதியாக திறந்த வாகனத்தில் சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்‌. அப்போது, மயிலாடுதுறையில் உள்ள பெரியகோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ மயூரநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த வேட்பாளர் ப.பாபு மயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகையிடம் பழங்கள் அளித்து ஆசி பெற்றார்.

பின்னர் கோயிலில் உள்ள கோசாலைக்கு சென்று அங்குள்ள பசுக்களுக்கு வாழைப்பழம் வழங்கி தரிசனம் பெற்றார். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை நகர் முழுவதும் உள்ள வார்டுகளுக்கு திறந்த வெளி வாகனத்தில் கடும் வெய்யிலையும்‌ பொறுட்படுத்தாமல் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தன்னை பெறுவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். கட்சி நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்தார்.

Tags

Next Story