போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தக்கோரி அதிமுக மனித சங்கிலி

போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தக்கோரி அதிமுக மனித சங்கிலி

மனித சங்கிலி போராட்டம் 

மயிலாடுதுறையில் போதை பொருள் மாநிலமாக தமிழ்நாடு மாறியதற்கு கண்டனம் தெரிவித்து, கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசு பதவி விலககோரி அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போதை பொருளுக்கு எதிராகவும், போதை பொருளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை பதவி விலகக் கோரியும் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில், மயிலாடுதுறை அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், நகரக் கழக செயலாளர் செந்தமிழன் சிறிது ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன் மற்றும் 600க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், போதைப் பொருளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

போதை பொருள் பயன்பாட்டால் தமிழ்நாடு தள்ளாடுது, போதைப் பொருளைக் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசு பதவி விலக வேண்டும், போதை பொருள் கடத்தலுக்கு துணை போகும் திமுக ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.

Tags

Next Story