மது போதைக்கு அடிமையானவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு !

மது போதைக்கு அடிமையானவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு. அப்போது
மது போதைக்கு அடிமையானவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு. கோவை மாவட்டம், பச்சப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி மகன் பழனிச்சாமி வயது 45. இவர் டெக்ஸ் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அண்மைக்காலமாக மது போதைக்கு அடிமையாகி இருந்தார் பழனிச்சாமி. இந்நிலையில் மே 7ம் தேதி காலை 9 மணி அளவில், கரூர் - கோவை சாலையில் உள்ள சென்னை சில்க் எதிர்ப்புறம் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த பழனிச்சாமியின் மனைவி ஜோதிமணி வயது 37 என்பவர், இது தொடர்பாக கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த பழனிச்சாமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story