களைகட்டிய ஆழியார் - அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

களைகட்டிய ஆழியார் - அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் 

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆழியார் சுற்றுலா பயணிகளை கவர்ந்த இடமாகும்.இங்கு வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆழியார்,ஆழியார் அணை பூங்கா,கவி அருவி, டாப்ஸ்லிப் உள்ளிட்ட இடங்களை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தீபாவளி பண்டிகையை ஒட்டி இன்றும் தொடர் விடுமுறை என்பதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கவியருவி மற்றும் ஆழியார் பகுதிகளை சுற்றி பார்க்க முகாமிட்டுள்ளனர். இதனால் ஆழியார் செக்போஸ்ட் அருகே வால்பாறை சாலையில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story