அம்பேத்கர் பிறந்த நாள்: ஆதி தமிழர் பேரவை அமைப்பினர் புகழ் வணக்கம்

அம்பேத்கர் பிறந்த நாள்: ஆதி தமிழர் பேரவை அமைப்பினர் புகழ் வணக்கம்

புகழ் வணக்கம் செலுத்திய ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர்

புரட்சியாளர் அம்பேத்கருக்கு ஆதி தமிழர் பேரவை அமைப்பினர் புகழ் வணக்கம் செலுத்தினர்.

இந்திய அரசியலமைப்பை கட்டமைத்த டாக்டர் அம்பேத்கர் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு, நாடு எங்கும் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் இன்று கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள காமராஜர் சிலை முன்பு அண்ணல் அம்பேத்கர் திரு உருவப்படத்திற்கு, மலர் மாலை அணிவித்து, ஆதி தமிழர் பேரவை அமைப்பின் மாவட்ட செயலாளர் பசுவை. பெரு. பாரதி தலைமையில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநிலக் கொள்கை பரப்பு செயலாளர் எம்.எஸ்.மணியன்,

மாநில இளைஞரணி செயலாளர் ரமேஷ், தோகைமலை ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், தாந்தோணி ஒன்றிய செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அண்ணல் அம்பேத்கரின் புகழ் பாடி வீரவணக்கம் செலுத்தினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story