அம்பேத்கர் பிறந்தநாள் - விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மரியாதை

கரூரில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் 133-வது பிறந்த நாளை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மரியாதை.அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்திய அரசியலமைப்பை கட்டமைத்த டாக்டர் அம்பேத்கர் 133-வது பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை நாடெங்கும் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக, கரூர் மாநகர மாவட்ட செயலாளர் கராத்தே இளங்கோ தலைமையில், அலங்கரிக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கரின் திரு உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் அக்கினி.இல. அகரமுத்து, கரூர் நகர செயலாளர் முரளி (எ) பாலசிங்கம், இனம் கரூர் நகர செயலாளர் அடங்கா தமிழ் அருள், மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் தீபக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அண்ணல் அம்பேத்கருக்கு வாழ்த்து கோஷங்களை எழுப்பி, புகழ் வணக்கம் செய்தனர்.

Tags

Next Story