மூதாட்டி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து !

மூதாட்டி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து !

காவல்துறை

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து.போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், விரலிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி பாலம்மாள் வயது 59. இவர் மார்ச் 29ஆம் தேதி காலை 9:30 மணி அளவில், கரூர் - திருச்சி சாலையில், காந்திகிராமம், விடியல் மருத்துவமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையைக் கடப்பதற்காக நடந்து செல்லும் போது, அவ்வழியாக வேகமாக வந்த ஒரு அடையாளம் தெரியாத டூவீலர், நடந்து சென்ற பாலம்மாள் மீது மோதிவிட்டு, மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் பாலம்மாளுக்கு தலை, உதடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு,தனியார் ஆம்புலன்ஸ் மூலம், திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த பாலம்மாவின் மகன் கண்ணன் வயது 41 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மூதாட்டி பாலம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற அந்த டூவீலர் எது? அதன் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.

Tags

Next Story