கூட்டத்திற்கு வந்த வங்கி நிர்வாகிகளுக்கு உற்சாக வரவேற்பு

கரூரில், வங்கி ஊழியர்கள் கூட்டத்திற்கு வந்த நிர்வாகிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கரூரில், வங்கி ஊழியர்கள் கூட்டத்திற்கு வந்த நிர்வாகிகளுக்கு உற்சாக வரவேற்பு. கரூர்- கோவை சாலையில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில், பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்கம் கோவை மண்டல உறுப்பினர் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்காக சென்னையில் இருந்து சங்கத்தின் மாநில தலைவர் ஸ்ரீதரன், சங்கத்தின் பொதுச் செயலாளர் கிருபாகரன் ஆகியோர் ரெசிடென்சி ஹோட்டலுக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு, பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்க தொழிற்சங்கத்தின் சார்பில், மலர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களது சங்க கோஷமான எஸ்பிஐ ஜிந்தாபாத், என்றும் சங்கத்தின் தலைவர், பொறுப்பாளர்களை வாழ்த்தி ஜிந்தாபாத் என கோஷங்களை எழுப்பினர். இந்த நிகழ்ச்சியை நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு வரவேற்பு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Tags

Next Story