வெங்கமேடு அருகே வீட்டை விட்டு வெளியேறிய முதியவர் மாயம்

வெங்கமேடு அருகே வீட்டை விட்டு வெளியேறிய முதியவர் மாயம்

காவல் நிலையம்

வெங்கமேடு அருகே வீட்டை விட்டு வெளியேறிய முதியவர் மாயமானர்.

கரூர் மாவட்டம், வெங்கமேடு, கொங்கு நகர், அன்னை இல்லம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் வயது 60. இவரது மனைவி அட்ச்சலயா எமக் லேட் மேரி வயது 48. கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். இதனிடைய மீண்டும் மே 13ஆம் தேதி காலை 9 மணி அளவில், கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால், விரக்தி அடைந்த பிரபாகர், வீட்டை விட்டு வெளியேறி சென்று விட்டார்.

வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பிரபாகர் வழக்கமாக செல்லும் இடங்களிலும், அவரது உறவினர்கள் வீட்டிலும் தேடிப் பார்த்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதனால் பிரபாகரின் மனைவி அட்ச்சலயா எமக் லேட் மேரி தனது கணவனை காணவில்லை என வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, மாயமான முதியவர் பிரபாகரை தேடி வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags

Next Story