மூதாட்டி மீது அடையாளம் தெரியாத கார் மோதி விபத்து !

மூதாட்டி மீது அடையாளம் தெரியாத கார்  மோதி விபத்து !

மருத்துவமனை

நடந்து சென்ற மூதாட்டி மீது வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் மோதி விபத்து. மூதாட்டி படுகாயம் அடைந்தனர்.

நடந்து சென்ற மூதாட்டி மீது வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் மோதி விபத்து. மூதாட்டி படுகாயம். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, மாணிக்கபுரம் அருகே உள்ள மேலடை பகுதியைச் சேர்ந்தவர் வையாபுரி மனைவி பெரியக்காள் வயது 62. இவர் ஏப்ரல் 3-ம் தேதி காலை 11 மணியளவில்,கரூர் - திருச்சி சாலையில், நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது கரூர் சின்னஆண்டாங் கோவில் பிரிவு அருகே நடந்து சென்ற பெரியக்காள் மீது, அதே சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று மோதி விட்டு, மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் மூதாட்டி பெரிய காளுக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரியக்காள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மூதாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? அந்த வாகனத்தின் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story