நடந்த சென்ற பெண் மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து

கரூரில் நடந்த சென்ற பெண் மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து ஏற்படுத்தியதில் பெண் படுகாயமடைந்தார்.
நடந்த சென்ற பெண் மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து. பெண் படுகாயம். கரூர் மாவட்டம் பள்ளபாளையம் அருகே உள்ள பி செல்லாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி ஜோதி வயது 38. இவர் மே 5-ம் தேதி மதியம் 3:30- மணி அளவில் கரூர் - கோவை சாலையில் நடந்து சென்றார். அப்போது வடிவேல் நகர், கவின் பேக்கரி அருகே நடந்து சென்ற போது, எதிர் திசையில் வேகமாக வந்த ஒரு டூவீலர், நடந்து சென்ற ஜோதியின் மீது மோதிவிட்டு, நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இந்த விபத்தில் ஜோதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில், தலை, இடது கை, வலது கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜோதி அளித்த புகார் பேரில் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஜோதி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? வாகனத்தை ஓட்டியது யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story