அண்ணா நினைவு தினம் - அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அண்ணா நினைவு தினம் - அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அண்ணா சிலைக்கு மரியாதை

மயிலாடுதுறை நகரில் அண்ணாவின் 55வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வரும் திமுக வை தோற்றுவித்தவருமான அண்ணாவின் 55 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் நகர திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. முன்னதாக கேனிக்கரை பகுதியில் இருந்து திமுக மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான நிவேதா முருகன் தலைமையில் நகர் மன்ற தலைவர் குண்டாமணி செல்வராஜ் மற்றும் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள் நகரில் பேரணியாக வந்தனர்.

கலந்து கொண்டனர். பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நினைவு தினத்தை முன்னிட்டு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர்.

Tags

Next Story