ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்

ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தில் அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர் .

ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்- உறுதிமொழி ஏற்ற அரசு அலுவலர்கள். குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில், தொழிலாளர் நலத்துறை சார்பில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதி மொழியை அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர். 14 வயதுக்கு உட்பட்ட அனைவரும் கல்வி கற்பதை உறுதி செய்திடவும், அறிவார்ந்த இளைஞர் சமுதாயம் உருவாகவும், குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கவும், ஒவ்வொரு வருடமும் ஜூன் 12-ம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி,கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால், 14 வயது உட்பட்ட குழந்தைகள் ஒருபோதும் எவ்வித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமாற உறுதி கூறுகிறேன். என அரசு துறை அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கத்திலே மாவட்ட வருவாய் அலுவலர் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் சண்முக வடிவேல், தொழிலாளர் நல அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story