பழகுநர் பயிற்சி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

கரூரில் ,கும்பகோணம் கோட்டம் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கரூரில் ,கும்பகோணம் கோட்டம் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் அவர்களின் ஒத்துழைப்புடன் தொழில்பழகுநர் பயிற்சி வாரியம் (தென்மண்டலம்) இணைந்து, இணையதளம் மூலமாக தகுதியான பொறியியல் பட்டம், பட்டப்படிப்பு, இயந்திரவியல், தானியங்கிவியல், மற்றும் பொறியியல் அல்லாத கலை, அறிவியல், வணிகம் பட்டதாரிகள் 2020, 2021, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடமிருந்து, ஒரு வருட தொழிற்பயிற்சிக்காக தொழில் பயிற்சி சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகிறது என்றும், மேலும், விவரங்களுக்கு இணையதளம் www.boat-srp.com (news and events column) ஐ பார்க்கவும். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள் 8 -7-2024 என பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story