மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 போலீசார் பணி நிறைவு பாராட்டு நிகழ்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 போலீசார் பணி நிறைவு பாராட்டு நிகழ்வு

பணி நிறைவு விழா

மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 உதவி ஆய்வாளர்கள், 4 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 1 தலைமை காவலர் பணி நிறைவு விழா.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட குற்றப்பிரிவில் பணிபுரிந்த உதவி ஆய்வாளர் S.திருஞானம், மயிலாடுதுறை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரிந்த உதவி ஆய்வாளர் N.மேகநாகன், பொறையார் காவல் நிலையத்தில் பணிபுரிந்த உதவி ஆய்வாளர் . K.லோகநாகன், மாவட்ட குற்றப்பிரிவில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் R.தெட்சணாமூர்த்தி, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் . S.மாரியப்பன், சீர்காழி காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் . V.கல்யாணசுந்தரம், பொறையார் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் . J.காளிதாஸ் மற்றும் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் R.மதியழகன் ஆகியோர்கள் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து இன்று 31.05.2024-ம் தேதி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்தியும் மற்றும் காவல் துணைக்கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து பணி நிறைவு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story