ஆதீன மிரட்டல் விவகாரம்: புதுச்சேரிக்கு விரைந்து போலீசார்

தருமபுரம் ஆதீன கர்த்தரை மிரட்டிய விவகாரத்தில் அதிமுக நிர்வாகியை தேடி புதுச்சேரி விரைந்தது தனிப்படை.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27வது குரு மகா சன்னிதானமாக உள்ளவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள். இவர் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் உள்ளதாக சிலர் நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு மிரட்டி பணம் கேட்டதாக புகார் எழுந்தது.

ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரின் பேரில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் தொடர்புடைய மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம், செய்யூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட ஐந்து பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் ஜெயச்சந்திரன் புதுச்சேரியில் தலைமறைவாக உள்ளதாக மயிலாடுதுறை தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து தனிப்படை போலீசார் அவரை தேடி புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர்.

Tags

Next Story