விஜயகாந்த் பேனருக்கு பாலாபிஷேகம் தீபாராதனை

விஜயகாந்த் பேனருக்கு பாலாபிஷேகம் தீபாராதனை

விஜயகாந்த் பேனருக்கு பாலாபிஷேகம்

மறைந்த விஜயகாந்த் இருக்கு பேனர் வைக்கப்பட்டு அதற்கு பால் அபிஷேகம் மலர் தூவி தீபாராதனை காண்பித்த தேமுதிகவினர்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைப்படத்துறையினர், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பலர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்த் மறைவிற்கு தேமுதிகவினர் மயிலாடுதுறையில் அன்றைய தினமே அவரது உருவப்படத்தை வைத்து மௌன அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், விஜயகாந்த் உயிரிழந்து 10 நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில் தேமுதிக மாநில பொதுக்குழு உறுப்பினர் பண்ணை பாலு தலைமையில் மயிலாடுதுறை சின்னக்கடை தெருவில் மீண்டும் பெரிய அளவில் அவரது படத்துடன் பேனர் வைத்து அதற்கு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து, மலர்தூவி, பால் அபிஷேகம் செய்து அஞ்சலி செலுத்தினர். அவர் எங்கள் மனதில் என்றும் வாழ்வார் என தேமுதிகவினர் தெரிவித்தனர்.

Tags

Next Story