வங்கிகள் சமுதாய வளர்ச்சிக்காக பாடுபடுகிறது - ஆட்சியர் விளக்கம்.

வங்கிகள் சமுதாய வளர்ச்சிக்காக பாடுபடுகிறது என வங்கி கிளை திறப்பு விழாவில் ஆட்சியர் விளக்கம்.

சமுதாயத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் வங்கிகளை பாராட்டுகிறேன். மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பாராட்டு.

இடமாற்றம் செய்யப்பட்ட பேங்க் ஆப் இந்தியா கரூர் கிளையை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் . அப்போது, நாட்டின் முதன் முதலில் வங்கியானது சேமிப்பிற்காக தொடங்கப்பட்டு பின்னர் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட தொடங்கியது. வங்கிகள் சமூக முன்னேற்றத்திற்காக நீங்கள் செய்யக்கூடிய அனைத்து உதவிகளும் சாதாரண கிராமப்புற ஏழை மக்களுக்கும், விவசாயிகளுக்கும், கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கும், தொழில் முனைவோருக்கும், சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் பாடுபட்டு வருகிறது. அதற்காக, வங்கிகளையும், வங்கி ஊழியர்களையும் பாராட்டுகிறேன் என்றார். இந்நிகழ்வில் , கோயம்புத்தூர் மண்டல மேலாளர் அஜய் தாக்கூர், முன்னோடி வங்கி மேலாளர் வசந்த்குமார், தஞ்சாவூர் எல்ஐசி கோட்ட மேலாளர் விஸ்வநாத் மற்றும் வங்கி ஊழியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story