மழையால் கூடை பந்தாட்டம் நேரம் மாற்றியமைப்பு

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் இன்று நடைபெற இருந்த கூடை பந்தாட்டம் நேரம் மழையால் மாற்றியமைக்கப்பட்டது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் இன்று நடைபெற இருந்த 64 ஆம் ஆண்டு எல்.ஆர்.ஜீ நாயுடு நினைவுச் சுழற் கோப்பை ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி மற்றும் 10ஆம் ஆண்டு KVB கோப்பை பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் மாலை 6:00 மணிக்கு துவங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது போட்டி நடைபெறும் திருவள்ளூர் மைதானம் இன்று மாலை பெய்த மழையால் மைதானம் முழுவதும் நனைந்து, போட்டி நடத்துவதற்கு ஏற்றதாக இல்லாமல் போனதால், கரூர் கூடைப்பந்து குழு தலைவர் C.பாஸ்கர் பார்வையிட்டு போட்டி துவங்கும் நேரத்தை மாற்றி அமைத்து அறிவித்துள்ளனர்.

ஆறு மணிக்கு துவங்க இருந்த போட்டியை இரவு 7:30- மணிக்கு துவங்குவதாக அறிவித்தனர். மேலும், மைதானத்தில் உள்ள மழை நீரை அகற்றும் பணியில் கரூர் கூடை பந்தாட்ட கழக தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மழையினால் தடை பட்ட இந்த போட்டியை காண்பதற்கு கரூர் மக்கள் ஆவலாக உள்ளனர்.

Tags

Next Story