நிலக்கடலை வாங்கும்போது கவனமாக இருங்க...!

நிலக்கடலை வாங்கும்போது கவனமாக இருங்க...!

நிலக்கடலை வாங்கும்போது கவனமாக இருங்க...!

மயிலாடுதுறை மாவட்டத்தில், தற்பொழுது நிலக்கடலை வேன்மூலம் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. ஒரு படி நிலக்கடலை, ரூ.30 என்றும் இரண்டு படியாக வாங்கினால், ரூ.50 என்றும் கூவிக்கூவி விற்பனை செய்துவருகின்றனர். தம் இடம் தேடி வருகிறது, அதுவும் விலை மலிவாகக் கிடைக்கிறது என, பொதுமக்களும் வாங்கிச் செல்கின்றனர். நிலக் கடலையை வாங்கிச் சென்று, அவித்து சாப்பிட முயன்றால், முக்கால் பாகம் பிஞ்சுகளாகவே உள்ளது.

வாங்கும்போது அனைத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது, எப்படி நிகழ்ந்தது, என்று பார்த்தால், நிலக்கடலை விற்பனை செய்பவர்கள், அவற்றை வாங்கும்போதே இரண்டாம்தர கடலைகளை வாங்கி, அதில் செம்மண்ணைசேர்த்து பிசைந்து, முற்றியதற்கும் பிஞ்சுகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஆக்கிவிடுகின்றனர். இது கலப்படமில்லை என்றாலும், நல்ல பொருளைப்போல் நம்பவைத்து வியாபாரம் செய்வது நல்ல வியாபாரிக்கு அழகல்ல. பொதுமக்களாகிய நாம்தான், விழிப்புடன் இருக்கவேண்டும்.

Tags

Next Story