அருமைக்காரன் புதூர் அருகே பைக்குகள் மோதி விபத்து: இருவர் படுகாயம்

அருமைக்காரன் புதூர் அருகே பைக்குகள் மோதி விபத்து: இருவர் படுகாயம்

காவல் நிலையம் 

அருமைக்காரன் புதூர் அருகே டூவீலர்கள் மோதி விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

அருமைக்காரன் புதூர் அருகே டூவீலர்கள் மோதி விபத்து. இருவர் படுகாயம். கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, தோட்டக்குறிச்சி, வடக்கு தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் குமார்.

இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கணபதி வயது 48 என்பவரும், இவர்களுக்கு சொந்தமான டூவீலரில், பிப்ரவரி 12ஆம் தேதி காலை 9 மணி அளவில், சேலம்- கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் அருமைக்காரன் புதூர் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, அதே சாலையில் வேகமாக டூவீலரை ஓட்டி வந்த,

நாமக்கல் மாவட்டம், போத்தனூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் ரஞ்சித் குமார் ஓட்டிய டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரஞ்சித்குமார் மற்றும் கணபதிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ரஞ்சித் குமார் அளித்த புகாரின் பேரில், டூவீலரை வேகமாக ஓட்டி, விபத்து ஏற்படுத்திய சண்முகா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வாங்கல் காவல்துறையினர்.

Tags

Next Story