கரூர்: டூவீலர் மோதி விபத்து

கரூர்: டூவீலர் மோதி விபத்து
டூவீலர் மோதி விபத்து
கரூர் அருகே நடந்து சென்ற முதியவர் மீது டூவீலர் மோதி படுகாயமடைந்தார்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, படிக்கட்டு துறை பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (73). இவர் ஏப்ரல் 28ஆம் தேதி காலை 7: 50 மணியளவில், கரூர் - கோவை சாலையில் நடந்து சென்றார். இவர் எல்ஜிபி பங்க் அருகே நடந்த சென்றபோது, எதிர் திசையில் கரூர், தாந்தோணிமலை, அசோக் நகர், 3வது கிராஸ் பகுதியைச் சேர்ந்த கலையரசன் (31) என்பவர் ஓட்டி வந்த டூவீலர், நடந்து சென்ற கருப்பையா மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் கருப்பையாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த கருப்பையாவின் மனைவி கஸ்தூரிபாய் வயது 68 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய கவியரசன் மீது நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story