கரூர் அருகே விபத்து

கரூர் அருகே விபத்து

கோப்பு படம்

தண்ணீர் பந்தல் பாளையம் அருகே டூவீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து ஏற்ப்பட்டது.

கரூர் மாவட்டம், ஏமூர், சீதப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (40). இவர் மே 21 ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் கரூர்- வாங்கல் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, டூவீலரை வேகமாக இயக்கியதால், கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு,தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள நீரோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த சுப்பிரமணியின் மகன் விக்னேஷ் வயது 24 என்பவர், அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர் வாங்கல் காவல்துறையினர்.

Tags

Next Story