காதப்பறை அருகே பைக் - வேன் மோதல்: இருவர் படுகாயம்

காதப்பறை அருகே பைக் - வேன் மோதல்: இருவர் படுகாயம்

காவல் நிலையம்

காதப்பறை அருகே பைக் - வேன் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

கரூர் மாவட்டம், காதப்பாறை அருகே உள்ள வெண்ணைமலை, பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் வயது 31. அதே பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் ஆகாஷ் வயது 20. இவர்கள் இருவரும் இவர்களுக்கு சொந்தமான எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏப்ரல் 11ம் தேதி காலை 9:15 மணியளவில், வெண்ணைமலை,

பசுபதிபாளையத்திலிருந்து வேட்டைக்காரன் புதூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் செம்மலர் நகர் அருகே சென்ற போது, எதிர் திசையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, பில்லா பாளையம், காந்தி நகர் காலனி சேர்ந்த துரைராஜ் வயது 22 என்பவர், எதிர் திசையில் வேகமாக ஓட்டி வந்த டாடா மேக்சி கேப் வாகனம், மோகன் ஓட்டிச் சென்ற எலக்ட்ரிக் டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூ வீலரை ஓட்டிய மோகனுக்கும், பின்னால் அமர்ந்து வந்த ஆகாசுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதில் மோகன் கரூரில் உள்ள செந்தில் கேர் மருத்துவமனையிலும், ஆகாஷை கோவை கங்கா மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மோகன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மேக்சி கேப் வாகனத்தை, வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய துரைராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story