கரூர் அருகே பைக்குகள் மோதல்: முதியவர் படுகாயம்

கரூர் அருகே பைக்குகள்  மோதல்: முதியவர் படுகாயம்
கரூர் அருகே பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார்.

கரூர் மாவட்டம், திருமாநிலையூர் முதல் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். வயது 66. இவர் மார்ச் 24ஆம் தேதி இரவு 9 மணி அளவில், திருச்சி - கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் ராமானுர் பிரிவு அருகே சென்றபோது, வேகமாக வந்த அடையாளம் தெரியாத மற்றொரு டூவீலர், ஜெயராமன் ஓட்டிய டூ வீலர் மீது மோதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.

இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜெயராமனுக்கு, வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரிலுள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெயராமன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசார மேற்கொண்ட காவல்துறையினர்,

இதுதொடர்பாக, டூவீலர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? அந்த வாகனத்தை ஒட்டிய நபர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story