எல்ஜிபி கம்பெனி அருகே பைக்குகள் மோதல்: இருவர் படுகாயம்

எல்ஜிபி கம்பெனி அருகே,டூ வீலர்கள் மோதிக் கொண்டதில் இருவர் படுகாயமடைந்தனர்.

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா,மஞ்ச புலிப்பட்டி அருகே உள்ள கன்னிமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி வயது 38. இவர் நவம்பர் 28ஆம் தேதி காலை 8 மணி அளவில் இவருக்கு சொந்தமான டூவீலரில், கரூர்- கோவை சாலையில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் எல்.ஜி்.பி. கம்பெனி அருகே சென்று கொண்டிருந்தபோது,

கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, பவித்திரம் அருகே உள்ள பள்ளமருதப்பட்டி பகுதியைச் சேர்ந்த லலித் குமார் வயது 27 என்பவர், அவரது டூவீலரில் வேகமாக சென்று, பழனிச்சாமி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் இருவரும் கீழே விழுந்ததில் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள்

இருவரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பழனிச்சாமியை கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், லலித் குமாரை கோவை கங்கா மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அறிந்த பழனிச்சாமி மனைவி சரிதா வயது 32 என்பவர், இது குறித்து கரூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,

டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய லலித் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story