வேட்பு மனு தாக்கல் செய்த பாஜ., வேட்பாளர் செந்தில்நாதன்

வேட்பு மனு தாக்கல் செய்த பாஜ., வேட்பாளர் செந்தில்நாதன்
கரூரில் தேர்தல் அலுவலரிடம் பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தேர்தல் அலுவலரிடம் வேட்பாளர் தாக்கல் செய்தார் பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன். பாரதிய ஜனதா கட்சியின் கரூர் மக்களவை வேட்பாளராக செந்தில்நாதன் போட்டியிடுகிறார். இன்று வேட்பாளர் மனு தாக்கல் செய்வதற்காக மதியம் 12:15 மணிக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். மாவட்ட ஆட்சியரும், கரூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலருமான தங்கவேலிடம் தனது வேட்ப மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுவை சரிபார்த்து பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், பின்னர் உறுதிமொழி ஏற்பு நகலை பூர்த்தி செய்து தருமாறு வேட்பாளரிடம் கூறி வழங்கினார். உறுதிமொழி நகலை பூர்த்தி செய்து,மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலரும் ஆன தங்கவேல் முன்னிலையில் உறுதி மொழியை வாசித்துக் காட்டினார். பின்னர் வேட்பாளர் கட்டணமான ரூபாய் 25 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியரிடம் ரொக்கமாக வழங்கினார்.

Tags

Next Story