கோவிலில் வழிபாடு செய்து பிரச்சாரத்தை துவக்கிய பாஜக வேட்பாளர்

தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் வழிபாடு செய்து பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தனது பிரச்சாரத்தை துவக்கினார்

கரூர் நாடாளுமன்ற பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் செந்தில்நாதன். இவர் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தனது முதல் பிரச்சாரத்தை கரூரை அடுத்த தாந்தோணி மலைப்பகுதியில் உள்ள கல்யாண வெங்கட ரமண சுவாமி கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்து பின்னர் தனது பிரச்சாரத்தை துவக்கினார்.

பிரச்சாரத்தின் போது மேளதாளம், நாதஸ்வரம் வாசிப்போடு, தனது ஆதரவாளுடன் சென்று, கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் வீடுகள் தோறும் சென்று தனக்கு வாக்களிக்குமாறு தேர்தல் பரப்புரை கையேடுகளை வழங்கி வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அவருக்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.கரூர் நாடாளுமன்ற தொகுதியில் பிரச்சாரம் களைகட்ட துவங்கி உள்ளதால் பொதுமக்களும் கட்சியினரும் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

Tags

Next Story