பொள்ளாச்சியில் பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்..

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வசந்தராஜன் தனக்கு பயிற்றுவித்த பள்ளி ஆசிரியருடன் வந்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்தரின் சரண்யாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19.ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சார் ஆட்சியர் அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர்.. இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.. இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வசந்தராஜன் இன்று பாஜக கட்சி அலுவலகம் முன்பு இருந்து தனது ஆதரவாளர்களுடன் மேலதாலங்களுடன் ஊர்வலமாக வந்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்தரின் சரண்யாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.. வேட்பு மனு தாக்கல் செய்த போது உடன் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் சுகுமார், பாஜக மாவட்ட பார்வையாளர் மோகன் மந்திராச்சலம், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி, மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் வக்கீல் துரை ஆகியோர் மற்றும் பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.. இன்று வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர் வசந்தராஜன் தனக்கு ஆரம்ப கால பள்ளியில் கல்வி பயிற்றுவித்த பள்ளி ஆசிரியருடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது..

Tags

Next Story