ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது

பாஜகவினர் கைது 

மயிலடுதுறையில் கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்புகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் 52 பேர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை முத்து வக்கீல் சாலையில் கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த பாஜகவினர் முயற்சித்தனர். ஏற்கனவே போராட்டம் நடத்த போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்டது . அங்கு வந்த பாஜகவினரை ஒருவர்பின் ஒருவராக போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் தங்க வரதராஜன், நகர தலைவர் செய்து தனியார் திருமண வினோத் மற்றும் 2 பெண்கள் உள்பட 52 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story