பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்கு கரூரில் உற்சாக வரவேற்பு

பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்கு கரூரில் உற்சாக வரவேற்பு
கூட்டத்தில் கலந்து கொண்ட ஜே.பி நட்டா
பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்கு கரூரில் உற்சாக வரவேற்புஅளிக்கப்பட்டது.


கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பிஜேபி வேட்பாளர் செந்தில் நாதனுக்கு வாக்குகள் சேகரிக்கவும், பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு கேட்டும் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தனியார் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா-வுக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள்,

பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், உற்சாக வரவேற்பு அளித்தனர். பாரதிய ஜனதா கட்சியின் கரூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன் ஜேபி நட்டாவுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் அவருக்கு சுவாமி சிலை ஒன்று கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது கூட்டத்தில் திறண்டு இருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் அனைவரும் ஜேபி நட்டாவிற்கு தங்களது ஆதரவு கோஷத்தை எழுப்பி உற்சாகப்படுத்தினர்.

Tags

Next Story