+1 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டதில் கைது

+1 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டதில் கைது

மாணவியை கடத்தியவர் கைது

மயிலாடுதுறை மணல்மேடு பகுதியில் +1 படித்து வரும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கடத்திய வாலிபரை மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை அருகே உள்ள கொற்கை பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலன் மகன் லோகநாதன் (22 )இவர் மணல்மேடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வரும் மாணவி ஒருவரை கடத்தி சென்று விட்டாதாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் உறவினரால் புகார் அளிக்கப்பட்டது.

அனைத்து மகிழ்ந்து காவல் நிலையப் போலீசார் அவர்கள் இருவரையும் கண்டு பிடித்து மீட்டு நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் லோகநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story