பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

கொள்ளை

கரூர் மாவட்டம், புலியூர், அம்மன் நகர் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம், புலியூர், அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கரன் பிள்ளை மகள் தனலட்சுமி வயது 47. இவர் மார்ச் 26 ஆம் தேதி தனக்கு உடல்நிலை அசௌகரியம் ஏற்பட்டதால், மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்று வர திருச்சிக்கு சென்று இருந்தார். மருத்துவமனைக்கு சென்று விட்டு, மீண்டும் மதியம் 3 மணி அளவில், வீடு திரும்பியபோது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சடைந்தார்.

நல்ல வேலையாக வீட்டிற்குள் சென்று பார்த்த போது அவரது பொருட்கள் ஏதும் களவாடப்படவில்லை. இருந்த போதும், தனது வீட்டின் கதவை உடைத்து களவாட முயன்ற விவகாரம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தார் தனலட்சுமி. புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, வீட்டின் கதவை உடைத்து களவாட முயன்ற நபர் யார்? என்று கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story