கனமழை காரணமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்.

கனமழை காரணமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்.
பொதுமக்கள் மாணவர்கள் தென்சங்கம்பாளையம் வழியாக சுற்றி செல்லக்கூடிய சூழல் நிலவி வருகிறது.
பொள்ளாச்சி மாவட்டம் ஆனைமலை சுற்றுப்பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக பாலாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனை அடுத்து பொள்ளாச்சியில் இருந்து சோமந்துறை சித்தூர் மற்றும் ஆனைமலை செல்லக்கூடிய தரைப்பாலம் மழையால் ஆற்று வெள்ளத்தில் இன்று அதிகாலை அடித்து செல்லப்பட்டது.இதனால் இவ்வழியாக வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லக்கூடிய மாணவ மாணவிகள் 10 கிலோ மீட்டருக்கு மேல் சுங்கம் மற்றும் தென்சங்கம்பாளையம் வழியாக சுற்றி செல்லக்கூடிய சூழல் நிலவி வருகிறது. உடனடியாக இந்த பாலத்தினை சீர் செய்து தருமாறு இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story